"அதிமுக அரசை குறை கூற எனது பெயரை பயன்படுத்த வேண்டாம்" - தீபா

அதிமுக அரசை எதிர்க்கவோ, குறை கூறவோ தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-03 08:30 GMT
அதிமுக அரசை எதிர்க்கவோ, குறை கூறவோ தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் படித்து திருமணம் செய்துகொண்டு குழந்தைகளுடன் குடும்பமாக வாழவேண்டும் என்பதே ஜெயலலிதாவின் விருப்பம் என்று குறிப்பிட்டுள்ளார். தனது குடும்பத்தை யாரும் கலைக்க வேண்டாம் எனவும் தீபா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்