கத்தி, அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் : கோவையில் வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சி

கோவை சரவணம்பட்டி பகுதியில் கத்தி அரிவாளுடன் சிலர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது தொடர்பான புகைப்படம் வெளியாகி உள்ளது.

Update: 2019-08-31 08:40 GMT
கோவை சரவணம்பட்டி பகுதியில் கத்தி அரிவாளுடன் சிலர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது தொடர்பான புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இருப்பவர்கள் கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் மீது பல வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் ரவுடி பினு உள்ளிட்டோர் ஆயுதங்கள் கொண்டு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல் ஒரு சம்பவம் சேலத்திலும் நடந்ததை தொடர்ந்து அவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் தான் கோவையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் ஆயுத கலாச்சாரம் கோவையில் தலைதூக்குகிறதோ என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்