"காவிரி விவகாரத்திற்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுவிட்டது " - கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பா தகவல்

காவிரி நதி நீர் விவகாரத்தில் ஏற்கனவே தீர்வு காணப்பட்டுவிட்டதாக கர்நாடகா ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.

Update: 2019-08-30 07:59 GMT
காவிரி நதி நீர் விவகாரத்தில் ஏற்கனவே தீர்வு காணப்பட்டுவிட்டதாக கர்நாடகா ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த அவர் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், பிரச்சினை ஏற்கனவே தீர்வு காணப்பட்டு விட்டதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்