திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

நாமக்கல் திமுக பிரமுகர் ஆனந்த் என்பவர், நாட்டு துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-08-27 14:38 GMT
நாமக்கல் திமுக பிரமுகர் ஆனந்த் என்பவர், நாட்டு துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம், க. பரமத்தி வேலூர் அருகே செங்கப்பள்ளி என்ற இடத்தில் நிகழ்ந்தது. தற்கொலை செய்து கொண்ட ஆனந்த், நாமக்கல் திமுகவின் மேற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளராக பணியாற்றி வந்தார். டாக்டர் ஆனந்த்தின் தோட்டத்தில் இருந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.  நாமக்கல் ஆனந்த்துக்கு, வேலூரில், சொந்தமாக மருத்துவமனை உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்