வேதாரண்யம் சம்பவம் - திருமாவளவன் கண்டனம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அம்பேத்கர் உருவ சிலையை சேதப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-08-26 02:17 GMT
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அம்பேத்கர் உருவ சிலையை சேதப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் செயல்பட்டவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். சாதி பயங்கரவாதிகளின் வேட்டைக்காடாக தமிழகம் மாறிவிடாமல் தடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்