வாணியம்பாடி அருகே தனியார் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து - ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 3 பேர் படுகாயம்
கோவிந்தபாடி அருகே அந்த வாகனம் வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பெங்களூரில் இருந்து வேலூர் சி.எம்.சி. தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் பெண் நோயாளி ஒருவர் நேற்று அழைத்து வரப்பட்ட நிலையில், வேலூர் மாவட்டம், அகரம்சேரி கோவிந்தபாடி அருகே அந்த வாகனம் வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் அந்த ஆம்புலன்சில் பயணம் செய்த பெண் நோயாளி, ஓட்டுநர் மற்றும் மருத்துவர் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக் கொண்டா போலீசார் 3 பேரையும் மீட்டு வேறு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் சி .எம் சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.