மனைவியை வெட்டி கொலை செய்த காவலர் தூக்குப் போட்டு தற்கொலை

குடும்பத் தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்த காவலர், தானும் தூக்லகுப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-08-19 02:02 GMT
சென்னை வண்ணாரப்பேட்டையில் காவலராக பணியாற்றி வந்த நரேஷ்,  சென்னையை அடுத்த புழல் திருமால் நகரில், மனைவி ஜெயஸ்ரீ, ஏழு வயது மகன் வருண் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கணவன் - மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நரேஷ், தனது மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார்,  பணிச்சுமை மன அழுத்தம் காரணமா ஏற்பட்ட சம்பவமா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தினர். இந்த விபரீத முடிவால், 7 வயது குழந்தை தாய், தந்தையை இழந்து நிற்பது அப்பகுதி மக்களிடையே பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்