இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம் : உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பெருமிதம்
இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம், மன்னார்குடியில் செயல்பட்டது என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.
இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம், மன்னார்குடியில் செயல்பட்டது என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற புத்தக கண்காட்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம் மாட்டு வண்டி மூலம் மன்னார்குடியில் செயல்பட்டது என்றும், புத்தக கண்காட்சி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.