80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயற்சித்த வழக்கு : 20 வயது இளைஞருக்கு சிறை

80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற 20 வயது இளைஞருக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

Update: 2019-08-15 02:38 GMT
80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற 20 வயது இளைஞருக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரைச் சேர்ந்த 88 வயது மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த அதே பகுதியை சேர்ந்த இளைஞர்  சரவணன் அவரை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சரவணனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்