காஷ்மீர் விவகாரம் : "ஜனநாயக விரோதமானது" - விஜய் சேதுபதி

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என்று நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-12 09:08 GMT
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என்று நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில்  உள்ள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அவரவர் மாநில பிரச்சினைக்கு, அந்தந்த மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்று பெரியார் கூறியிருப்பதை, தமது பேட்டியில், சுட்டிக்காட்டி உள்ள விஜய்சேதுபதி, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அக்கறை செலுத்தலாமே தவிர, ஆளுமை செலுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்