'ஆகாய கங்கை' நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தடை நீக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் நீராடி வருகின்றனர்.

Update: 2019-07-28 07:05 GMT
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தடை நீக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் நீராடி வருகின்றனர். முன்னதாக நிலவிய வறட்சி காரணமாக நீர் வீழ்ச்சி வறண்டது. இந்நிலையில், தற்போது பெய்த மழை காரணமாக, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. இதைத் தொடர்ந்து, ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதால், வெள்ளியை உருக்கியது போல், 200 அடி உயரத்தில் இருந்து கொட்டும் அருவியில் குளிக்க, பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்