"6200 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள்" - அமைச்சர் தங்கமணி தகவல்
புதிதாக 6 ஆயிரத்து 200 மெகா வாட் மின் உற்பத்திக்கான அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட இரத்த சுத்திகரிப்புப் மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, 6 ஆயிரத்து 200 மெகா வாட் மின் உற்பத்திக்கான அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் வரும் 2024ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்றார். சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தில், 2 இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.