குளம் போல காட்சியளிக்கும் மேல்ஆலத்துர் ரயில்வே கீழ் தரைப்பாலம்

வேலூர், குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்துர் ரயில்வே தரைப்பாலம் குளம் போல காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

Update: 2019-07-14 09:40 GMT
வேலூர், குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்துர் ரயில்வே தரைப்பாலம் குளம் போல காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், பல லட்சம் மதிப்பில் கட்டபட்ட இந்த பாலத்தை 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மழை பெய்த நிலையில், மழை நீர் செல்வதற்கு வடிகால் இல்லாததால் பாலத்தின் அடியில் குளம் போல தேங்கி நின்றது. மாற்று வழி இல்லாததால், ஆபத்தான முறையில் வாகன ஓட்டிகள் இதில் பயணம் செய்து வருகின்றனர். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க 
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல லட்சம் செலவழித்து கட்டப்பட்ட தரைப்பாலத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்