ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ. 27,74,000 பறிமுதல் - தேர்தலை ஒட்டி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி

வேலூரில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-13 18:33 GMT
மக்களவை தேர்தலை சந்திக்கும் வேலூரில், ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில், ஆவணங்கள் இன்றி வைத்திருந்த 27 லட்சத்து 74  ஆயிரம் ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தேர்தல் விதிமுறை அமலில் உள்ள வேலூர் அருகே, புதுவசூரில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ஏழுமலை வீட்டில் பணம் இருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில், ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த 27 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள், விசாரித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்