மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசை ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2019-07-10 11:03 GMT
மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் கஜேந்திர சிங் செகாவத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில், மேகதாது அணைக்கு ஒப்புதல் வழங்க கூடாது என வலியுறுத்தியுள்ளார். வரும் 19 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில், மேக தாது அணைக்கு அனுமதி கோரிய கர்நாடகாவின் விண்ணப்பத்தின் மீது எந்த முடிவும் எடுக்க கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.அந்த கூட்டத்தில் அணை குறித்து எந்த விவாதமும் நடத்தக்கூடாது என்றும், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்றும் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்