அரசை விட அறநிலைத்துறைக்கு அதிக நிலங்கள் - திருத்தொண்டர் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன்

தமிழக அரசுக்கு சொந்தமான இடங்களை விட அறநிலை துறைக்கு அதிகமான இடங்கள் இருப்பதாக திருத்தொண்டர் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-09 13:25 GMT
தமிழக அரசுக்கு சொந்தமான இடங்களை விட அறநிலை துறைக்கு அதிகமான இடங்கள் இருப்பதாக திருத்தொண்டர் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாமக்கல் நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துக்கள் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர், அறநிலை துறைக்குரிய நிலங்களை  முறையாக மேற்படுத்தினால், அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று தெரிவித்தார். இதன் மூலம் அரசு மதுபானத்தில் கிடைக்கும் வருமானத்தை நம்ப வேண்டிய தேவை இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்