புதிய கல்வி கொள்கை நகலை எரிக்க முயன்ற மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

கோவையில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை நகலை எரிக்க முயன்ற மாணவர்களுக்கும் போலீசாருக்கிடையே தள்ளூ முள்ளு ஏற்பட்டது.

Update: 2019-06-25 13:32 GMT
கோவையில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை நகலை எரிக்க முயன்ற மாணவர்களுக்கும் போலீசாருக்கிடையே தள்ளூ முள்ளு ஏற்பட்டது. அரசுக் கலை கல்லூரி முன்பு திரண்ட மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நகலை எரிக்க முயன்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கலைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்