பொறியியல் மாணவர் சேர்க்கை : 25-ஆம் தேதி தொடங்கும்

பொறியியல் மாணவர் சேர்க்கை, வரும் 25-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-06-17 08:24 GMT
பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் முதலில் வெளியிட்ட அட்டவணைப்படி, தர வரிசைப் பட்டியல் இன்று 17ம் தேதி வெளியிடப்படும் எனவும், 20 ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் எனவும் அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பு பணி களில் ஏற்பட்ட தாமதம் காரணமாக முதலில் வெளியான அட்டவணை ரத்து செய்யப்பட்டு, தற்போது புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 25-ஆம் தேதி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வும், 26ம் தேதி முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான கலந்தாய்வும், 27ஆம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
26ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த கலந்தாய்வு, சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு, ஏற்கனவே அறிவித்தபடி ஜூலை 3ஆம் தேதி முதல் ஆன்லைன்  வழியாக நடைபெறும் என்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதுபோல, இன்று வெளியாக இருந்த தரவரிசை பட்டியல், வரும் 20 ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்