சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வேளச்சேரி எல்.ஐ.சி. நகர், 3 வது தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ். அவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் அத்துமீறல் செய்ததில் சிறுமி கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட வேளச்சேரி போலீசார் யுவராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் யுவராஜ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.