நடிகர் சங்க தேர்தலில் அரசியல் தலையீடு இல்லை - நடிகர் நாசர்

நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் நாசர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.

Update: 2019-06-09 10:14 GMT
நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் நாசர், தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனிடம், பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நடிகர் நாசர் தனது வேட்புமனுவை வழங்கினார். இந்நிலையில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் கார்த்தி, படப்பிடிப்பில் இருப்பதால் அவருடைய வேட்புமனுவும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டது. மனு தாக்கலுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நாசர், நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை என்றும், அரசுக்கு கவனிக்க வேண்டிய வேறு பெரிய பிரச்சினைகள் உள்ளது என்றும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்