நாகை மீனவர்கள் 18 பேருக்கு காவல் நீட்டிப்பு - இலங்கை பருத்திதுறை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 18 பேருக்கு வரும் 14 ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-06-01 19:43 GMT
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை  மீனவர்கள் 18 பேருக்கு வரும் 14 ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 5 ந்தேதி நடுக்கடலில்  மீன்பிடித்த போது எல்லை தாண்டி வந்ததாக அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களின் காவல்நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர்மாதம் நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல்மோதி படகு மூழ்கியதையடுத்து கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் உள்ள  4 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் வரும் 10ந்தேதி ஆஜர்படுத்தி விடுதலை செய்யப்படுவார்கள் என இந்திய துணை
தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்