பார் உரிமையாளர் நெல்லையப்பன் தற்கொலை விவகாரம் - மாவட்ட எஸ்.பி. அதிரடி நடவடிக்கை

டாஸ்மாக் பார் உரிமையாளர் நெல்லையப்பன் தற்கொலை விவகாரம் தொடர்பாக, திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-05-29 09:58 GMT
டாஸ்மாக் பார் உரிமையாளர் நெல்லையப்பன் தற்கொலை விவகாரம் தொடர்பாக, திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு மாற்றம்  செய்யப்பட்டுள்ளார். பார் உரிமையாளர் ஆனந்த், மாமல்லபுரம் டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர் கண்ணன் மீது வழக்குபதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாவட்ட கூடுதல் எஸ்.பி. சந்திரசேகரன்,நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, நெல்லையப்பன் உடல் தீப்பிடித்து எரிந்தபோது யாராவது எதிர் வீடுகளில் உள்ளவர்கள் பார்த்தார்களா? என்று அப்பகுதியில் உள்ளவர்களிடம் கேட்டறிந்தார். 
Tags:    

மேலும் செய்திகள்