"நோயாளிகளை பார்க்க பணம் வசூலிக்கும் மருத்துவ ஊழியர்கள்"

திருவண்ணமலை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் பிறந்த குழந்தைகளை பார்க்க வரும் பார்வையாளர்களிடம் மருத்துவ ஊழியர்கள் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2019-05-20 21:12 GMT
திருவண்ணமலை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் பிறந்த குழந்தைகளை பார்க்க வரும் பார்வையாளர்களிடம் மருத்துவ 
ஊழியர்கள் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்கு நோயாளிகளுக்கு குளுகோஸ் போடுவதற்கு கூட 100 ரூபாய் பணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனையின் காவலாளி ஒருவர் பார்வையளர்களிடம் பணம் வசூலிப்பது தொடர்பான வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்