சுற்றுலா பயணிகளைக் கவரும் சிம்ஸ் பூங்கா

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ளது. அங்குள்ள குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

Update: 2019-05-20 03:52 GMT
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ளது. அங்குள்ள குன்னூர் சிம்ஸ்  பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. கோடை சீசனுக்காக  சிம்ஸ் பூங்காவில் நடவு செய்யப்பட்ட ரோஜா செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றை பார்வையிட, சுற்றுலா பயணிகள்  அதிகளவில் குவிந்துள்ளனர். பூக்களுக்கு இடையில் புகைப்படம் எடுக்கவும், ஏரியில்  சவாரி செய்யவும் சுற்றுலா  பயணிகள்  ஆர்வம் காட்டிவருவதால், சிம்ஸ்பூங்கா வண்ணமயமாக  மாறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்