பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ், சிசிடிவி பொருத்த கோரிய வழக்கு : பள்ளி கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தின், பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி பொருத்துவது குறித்து பதில் அளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-05-15 11:00 GMT
சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர், தாக்கல் செய்த பொதுநல மனுவில், கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளி வேனில் 4 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் கருவிகள் பொருத்த உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதனை, விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி  அமர்வு வழக்கு குறித்து பள்ளி கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்