பாஜகவுடன் த.மா.கா. இணையும் என்ற கருத்துக்கு எதிர்ப்பு - கே.எஸ். அழகிரியின் உருவ பொம்மை எரிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூரில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரியின் உருவபொம்மை எரித்து த.மா.கா.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-11 02:18 GMT
சேலம் மாவட்டம் ஓமலூரில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரியின் உருவபொம்மை எரித்து த.மா.கா.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலுக்கு பிறகு தமிழ் மாநிலக் காங்கிரஸ் பாஜகவில் இணைய உள்ளதாக கூறிய அவர், த.மா.காவினருக்கு அழைப்பு விடுத்திருந்தார். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வரவேண்டும் என்றும், அவர்களை இருகரம் நீட்டி வரவேற்பதாகவும் கூறியிருந்தார். இதற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனிடையே, ஓமலூரில் காந்தி சிலை அருகே திரண்ட த.மா.கா.வினர், கே.எஸ்.அழகிரியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்