"தமிழகத்தில் நடைபெறுவது ஜெயலலிதா ஆட்சி கிடையாது" - பிரசாரத்தின் போது தினகரன் விமர்சனம்

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து தினகரன் பிரசாரம் மேற்கொண்டார்

Update: 2019-05-10 02:15 GMT
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் தினகரன், மதுரை மாவட்டம் பசுமலை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் தற்போது நடைபெறுவது ஜெயலலிதா ஆட்சி கிடையாது என்று அவர் கூறினார். அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டதாக குறிப்பிட்ட அவர், அதனால்தான் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறினார். தங்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு மே 23ந்தேதி பாடம் புகட்டப்படும் என்றும் தினகரன் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்