3 வது மாடியில் நின்று செல்போன் பேசிய மாணவி : மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம்

சென்னை அயனாவரத்தில், 3வது மாடியில் நின்று செல்போன் பேசிய 16 வயது மாணவி படுகாயம் அடைந்தார்.

Update: 2019-05-09 01:45 GMT
சென்னை அயனாவரத்தில், 3வது மாடியில் நின்று செல்போன் பேசிய 16 வயது மாணவி படுகாயம் அடைந்தார்.  அங்குள்ள வடக்கு மாட வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு அந்த மாணவி பேசிக் கொண்டிருந்தபோது, கீழே விழுந்து தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த மாணவியை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், மாணவி தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தில் தற்கொலை முயற்சியா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்