பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பொள்ளாச்சி வழக்கில் கைதான திருநாவுக்கரசு உள்ளிட்டோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-05-08 08:39 GMT
திருநாவுக்கரசு உள்ளிட்டோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, அவரது தாய் பரிமளா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுக்கள் நீதிபதி வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய சட்டத்தின் கீழ் தான் விசாரிக்க வேண்டும் எனவும் குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து பிறப்பித்த உத்தரவை குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கவில்லை என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. வாதத்தை ஏற்ற நீதிபதிகள் நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக உள்துறை செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்