அ.ம.மு.க. பிரமுகரை வெட்டி கொன்ற கும்பல் - காதல் விவகாரமா? போலீஸ் விசாரணை

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான காதர் உசேனின் மகன் ஜாவித் உசேன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்.

Update: 2019-05-08 04:37 GMT
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான காதர் உசேனின் மகன் ஜாவித் உசேன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர். இவர் கீழகல்கண்டார் கோட்டை பஞ்சாயத்து அலுவலகம் அருகே  சென்று கொண்டிருந்த போது மர்ம கும்பல்,  அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் படுகாயமடைந்த ஜாவித் உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், காதல் விவகாரம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்திருக்க கூடுமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்