அடிப்படை வசதிகள் கோரி உண்ணாவிரத போராட்டம் : பேரூராட்சி அலுவலகம் முன்பு குவிந்த பொதுமக்கள்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கருப்பூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அடிப்படை வசதி கோரி, பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-07 12:32 GMT
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கருப்பூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அடிப்படை வசதி கோரி, பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், விவசாயம் மற்றும் குடிப்பதற்கு உரிய தண்ணீர் விநியோகம் செய்திட வேண்டும், சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து சமரச பேச்சில் ஈடுபட்டதையடுத்து, பொது மக்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்