சாலையோரம் நடமாடிய யானைகள் : ஆபத்தை அறியாமல் செல்பி எடுத்த வாகன ஓட்டிகள்

ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் சாலையோரம் நடமாடும் யானைகளின் அருகே சென்று, ஆபத்தை அறியாமல் வாகன ஓட்டிகள் செல்பி எடுத்து வருகின்றனர்

Update: 2019-05-05 06:31 GMT
ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் சாலையோரம் நடமாடும் யானைகளின் அருகே சென்று, ஆபத்தை அறியாமல் வாகன ஓட்டிகள் செல்பி எடுத்து வருகின்றனர். புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. வறட்சி காரணமாக குடிநீர் மற்றும் உணவு தேடி சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள வனப்பகுதியில் பகல் நேரங்களில் விலங்குகள் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில் யானைகள் சாலையோரம் சுற்றி திரிவதை கண்ட வாகன ஓட்டிகள் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்போனில் படம் எடுக்கின்றனர். இது போன்ற செயல்கள் குறித்து எச்சரிக்கை செய்யுமாற வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்