பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு

புதுச்சேரியில் கீதா என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், கீதாவுடன் தொடர்பில் இருந்த ஆனந்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2019-04-29 11:55 GMT
புதுச்சேரியில் கீதா என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், கீதாவுடன் தொடர்பில் இருந்த ஆனந்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கீதா கணவனை பிரிந்து தனியாக தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், கீதாவுக்கும், தட்டு வண்டி தொழிலாளி ஆனந்த் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.  இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட வந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில்,  ஆத்திரமடைந்த ஆனந்த், கீதாவை குத்தி கொலை செய்துள்ளான். இதனையடுத்து, போலீசாரின் ஆனந்திடம் விசாரணை செய்ததில் கீதா, ஆனந்தை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு நபருடன் நட்பு வைத்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளான்.இதையடுத்து ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.  
Tags:    

மேலும் செய்திகள்