ஒப்பிலியப்பன் கோவிலில் ராமர் பட்டாபிஷேகம்
கும்பகோணத்தை அடுத்து திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் ராமர் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பகோணத்தை அடுத்து திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் ராமர் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. உப்பிலியப்பன் கல்யாணமண்டபத்தில் ராமர் சீதை அனுமன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பட்டாச்சாரியார்கள் சிறப்பு மந்திரங்கள் முழங்கி பாரம்பரிய வழக்கப்படி பட்டாபிஷேகத்தை நடத்தினர்.