மீன் இனப்பெருக்க காலம் - விசைப்படகுகளுக்கு தடை

கூடுதல் விலைக்கு விற்பனை, நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி

Update: 2019-04-21 14:07 GMT
மீன் இனப்பெருக்கத்துக்கான, மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில் விசைப் படகுகள் அனைத்தும் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீன்களின் வரத்து குறைந்து உள்ளதால்,  நாட்டுப்படகு மீனவர்கள் பிடித்து வரும் குறைந்த அளவு மீன்களுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது. ராமேஸ்வரத்தில் நாட்டு படகு மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை அப்படியே ஏலத்தில் விடுவதால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்துச் செல்கின்றனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்