பொன்பரப்பி, பொன்னமராவதி வன்முறை சம்பவங்கள் காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை - அதிமுக

பொன்னமராவதி வன்முறை சம்பவங்களுக்கு காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-04-21 10:16 GMT
இது தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இரு சம்பவங்களிலும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனடியாக தலையிட்டு அங்கு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டதாகவும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதி காக்க அதிகாரிகள் எடுத்து வரும்  நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்