பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை - கணக்கில் வராத ரூ.59 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலையில் பிரபல பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 59 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-04-10 07:33 GMT
திருவண்ணாமலையில் பிரபல பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 59 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை துராப்லி தெருவைச் சேர்ந்த பிரபல பைனான்சியர் நாகப்ப செட்டியார் என்பவர் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் நேற்று இரவு நாகப்ப செட்டியார் வீட்டிற்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத 59 லட்ச ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல், திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் பிரபல தொழிலதிபர் கமல்சந்த் ஜெயின் என்பவர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டது குறிப்படதக்கது.


Tags:    

மேலும் செய்திகள்