"மோசடி நபர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள்" - திரைத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஔடதம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர்நீதிமன்றம், மோசடிப் பேர்வழிகளிடம் எச்சரிக்கையாக இருக்கும் படி, திரைத்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளது.

Update: 2019-04-06 22:16 GMT
ஔடதம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர்நீதிமன்றம், மோசடிப் பேர்வழிகளிடம் எச்சரிக்கையாக இருக்கும் படி, திரைத்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளது. ஓளடதம் என்ற படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை அகற்ற கோரி, நேதாஜி பிரபு என்பவர், ம​னுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஆவணங்களை ஆராயும்போது, சில ஆவணங்கள் போலியானது என கூறி, படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார். அதே நேரம், இதுபோன்ற நபர்களிடம் தமிழ் திரைப்படத்துறை மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்