3 முதல்வர்களிடம் பணியாற்றிய தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மரணம்

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.

Update: 2019-04-06 06:54 GMT
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 90. நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த சிலம்பொலி செல்லப்பன், உல தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றியவர். வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்த சிலம்பொலி செல்லப்பன், தமிழகத்தில் 3 முதலமைச்சர்களிடம் பணியாற்றிய பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்