முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு : நேரில் ஆஜராக கனிமொழிக்கு நீதிமன்றம் உத்தரவு
முதலமைச்சர் பழனிசாமியை அவதூறாக பேசிய வழக்கில், வரும் 9ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு, திமுக எம்.பி. கனிமொழிக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
முதலமைச்சர் பழனிசாமியை அவதூறாக பேசிய வழக்கில், வரும் 9ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு, திமுக எம்.பி. கனிமொழிக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக சார்பில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி , திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பங்கேற்ற கனிமொழி, முதலமைச்சர் உள்ளிட்டோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட அரசு வழக்கறிஞர் சீனுவாசன் தொடர்ந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வரும் 9 ஆம் தேதி கனிமொழி நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.