ஆடிட்டர் குருமூர்த்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - வழக்கு விசாரணை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

குருமூர்த்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கை வேறொரு அமர்வுக்கு மாற்றி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Update: 2019-04-05 13:10 GMT
ஆடிட்டர் குருமூர்த்தி உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த கருத்துக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்காக நீதிபதி சித்தார்த் மிருதுல் சிறப்பு அமர்வு முன்பு வந்தது.வழக்கு விசாரணையை வேறொரு அமர்வுக்கு மாற்றுவதாக அறிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் பதினொராம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்