பறை இசைத்து வாக்கு கேட்ட வேட்பாளர்கள் : ஓரிடத்தில் ஒன்று திரண்ட 10 சுயேட்சைகள்
பறை இசைத்து வாக்கு கேட்ட வேட்பாளர்கள் : ஓரிடத்தில் ஒன்று திரண்ட 10 சுயேட்சைகள்
ஹைட்ரோ கார்பன் மற்றும் ஷேல் கேஸ் திட்டங்களை கைவிட வேண்டும் , காவிரி பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திட வேண்டும் , மருத்துவ கல்லூரி மற்றும் விவசாய கல்லூரி தொடங்கிட வேண்டும் , மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நிலம் நீர் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 10 வேட்பாளர்கள் மயிலாடு துறை தொகுதி தேர்தலில் களம் புகுந்துள்ளனர் . அவர்கள் மயிலாடுதுறை ரயில்வே நிலையம் அருகே ஒன்று திரண்டு , பறை இசை இசைத்தபடி மக்களிடம் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனர்