கரும்பு கட்டிய மாட்டு வண்டியில் ஊர்வலம் - நாம் தமிழர் கட்சி பெண்வேட்பாளர் மனு தாக்கல்
3 மாட்டு வண்டிகளில் கரும்புகள் கட்டி அதில் நின்று கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தார்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக களம் இறங்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சித்ரா , மஞ்சை நகர் மைதானத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் 3 மாட்டு வண்டிகளில் கரும்புகள் கட்டி அதில் நின்று கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தார். அங்கு தேர்தல் அதிகாரி அன்புச்செல்வனிடம் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்