பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு : 72 வயது முதியவர் உட்பட 3 பேர் கைது

சென்னையில் 12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 72 வயது முதியவர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

Update: 2019-03-18 02:47 GMT
சென்னை கொருக்குப்பேட்டை பாரதியார் நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 12 வயது பள்ளி மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர் ரத்தினம், மற்றும் லக்‌ஷ்மணன், ராஜா ஆகிய மூன்று பேர்  பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இது குறித்து அந்த மாணவி  தனது டியூஷன் டீச்சரிடன் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த டியூஷன் டீச்சர் குழந்தைகள் நல பாதுகாப்பு  அமைப்பிற்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்குவந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் விசாரித்து விட்டு, ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்