பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் : பார் நாகராஜ் யார்?

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய பார் நாகராஜ் பின்னணி..

Update: 2019-03-12 03:45 GMT
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்தவர் பார் நாகராஜ்.இவர் பொள்ளாச்சி நகராட்சி 34-வது வார்டு அ.தி.மு.க அம்மா பேரவை செயலாளராக பதவி வகித்து வந்தார். டாஸ்மாக் பாரை குத்தகைக்கு எடுத்து நடத்தியதால் இவருக்கு பார் நாகராஜ் என்ற பெயர் வந்தது.மேலும் வட்டிக்கு பணம் கொடுக்கல் தொழிலும் செய்து வருகிறார். இவர் கடந்த27-ந்தேதி மாணவியின் சகோதரரை தாக்கிய   வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் 28-ந்தேதியே அவர் ஜாமினில் வெளியே வந்தார்.ஏற்கனவே பாலியல் வழக்கில்  கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள  சபரிராஜன் ,சதீஸ்,வசந்தகுமார் திருநாவுக்கரசுக்கு பார் நாகராஜ் நண்பர் ஆவார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து பார் நாகராஜ் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்