சரக்கு ரயில் மூலம் செம்மரக்கட்டைகள் கடத்தல் - 320 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

கைப்பற்றப்பட்ட செம்மரக்கட்டைகள் மதிப்பு ரூ.9 லட்சம்

Update: 2019-03-09 22:15 GMT
கர்நாடகாவில் இருந்து சென்னை வந்த ரயிலில், கடத்தி வரப்பட்ட 320 கிலோ செம்மரக்கட்டைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 9 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. சென்னை கொருக்குபேட்டைக்கு வந்த சரக்கு ரயிலில் ஊழியர்கள், பொருட்களை இறக்குவதற்காக சென்றனர். அப்போது, செம்மரக்கட்டைகள் இருப்பது குறித்து தகவலறிந்த, அதிகாரிகள் உடனடியாக அவற்றை பறிமுதல் செய்தனர். செம்மரக்கட்டைகளை, ரயிலில் அனுப்பியது யார் என்பது குறித்து போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்