கடலூர் : வருவாய் துறை ஊழியர்கள் 2 வது நாளாக போராட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தாசில்தார்களை வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதனை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.