பழனி : மாசி மகத்தை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

மாசி மகத்தை முன்னிட்டு பழனியில் பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2019-02-21 09:22 GMT
மாசி மகத்தை முன்னிட்டு பழனியில் பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பழனி முருகன் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சுவாமியை வழிபட்டு செல்கின்றனர். கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து வந்த பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து வந்து சுவாமியை வழிபட்டனர். உடல் முழுவதும் அலகு குத்தி ராட்சத கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி பிரம்மாண்டமான பறவை காவடியில் பக்தர்கள் வந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்