தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடைபெறவில்லை - முத்தரசன்

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-10 09:52 GMT
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறினார். அதிமுகவை மிரட்டி பாஜக அதிக தொகுதிகள் கேட்டு வருவதாகவும் அவர் கூறினார்
Tags:    

மேலும் செய்திகள்