எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் கைது...

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Update: 2019-02-09 22:03 GMT
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.  நாகபட்டினத்தில் இருந்து  மீன்பிடிக்க சென்ற ஆறு மீனவர்கள், திருகோணமலை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களை சுற்றி வளைத்து கைது செய்த  இலங்கை கடற்படையினர் மீனவர்களை திரிகோணமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திரிகோணமலை சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்